RWO Homeland
முகப்பு | செய்திகள் | அறிக்கைகள் | உறவின் குரல்கள் | கருத்துக்கள்| தொடர்புகளுக்கு |
எம் தேசத்து உறவுகளே!

பன்னாடுகளில் பரந்து வாழும் பாசத்துக்குரிய எம் தேசத்து உறவுகளே!
தாயகத்தில் இருந்து எழும் எம் குரல்கள் உம் செவிகளுக்கு கேட்கிறதா? இங்கிருந்து நாம்படும் வதையும் வலியும்
உம் கண்களுக்குத் தெரிகிறதா? இங்கோர் மனிதப் பேரவலம் நிகழ்வதைப் பார்க்கக் கேட்க உங்கள் இதயம் கனக்கவில்லையா?
“கேளுங்கள் எம் அவலத்தை” “திறவுங்கள் உங்கள் இதயத்தை”
நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்து இருள் படிந்து போகிறது எம் வாழ்வு.
 
செய்திகள்

மழை தணிவடைந்துள்ள நிலையில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது
December 29, 2008

வன்னயில் பெய்து வந்த கடும் மழை தணிவடைந்துள்ள நிலையில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த குடியிருப்புக்களில் தங்கியுள்ள மக்கள் இந்நுளம்புகளால் தற்போது பெரும் சிரமங்களையும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.

நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மலத்தியோன் போன்ற மருந்துகளை வன்னிக்கு எடுத்துவர படைத்தரப்பு தடைசெய்து வருகின்ற சூழ்நிலையில் உள்ளுரில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் நுளம்புவலைகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு இப்போது வழங்கி வருகின்றன. ஆனாலும் இதனை இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடுமபங்களுக்கும் வழங்க இந்நிறுவனங்களுக்கு முடியாமலுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழநாதம் - 29.12.2008

©2008 R.W.O HomeLand -info@rwohomeland.com